வடபழனியில் தீயை அணைக்கச் சென்ற போலீசிடம் சிக்கிய வெளிநாட்டு விபசார அழகி

வடபழனி ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி அருகில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மாடியில் நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென புகை முண்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். புகை முட்டம் வந்த வீட்டில், ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அங்கிருந்த ஒரு அறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று போலீசார் பார்த்தனர்.

அப்போது பங்களாதேஷை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்தார். அவர் விபசார அழகி என்பது தெரிய வந்தது. அவர் சினிமாவில் நடிக்க வந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். அங்கு கேமராக்களும் இருந்தன. இதனால் அவர் ஆபாச படத்தில் நடிக்க வந்தாரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ஒரு கும்பல் அப்பெண்ணை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களையும் இப்பெண்ணை அறையில் அடைத்த சென்னை கும்பலையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அப்பெண்ணுக்கு இந்தி, ஆங்கிலம் மொழிகள் எதுவும் தெரியவில்லை. இதனால் அவரிடம் தீவிரமாக போலீசாரால் விசாரிக்க முடியவில்லை.